2023 ஆம் ஆண்டின்
ஐசிசி ஹால் ஆப் பேம் விருது அரவிந்த டி சில்வாவுக்கு.
யார் இந்த அரவிந்த
டி சில்வா ??
இன்றைய காலகட்டத்தில்
ஒரு பேட்ஸ்மேன் அடித்த ரன்கள், சதங்கள், ஸ்ட்ரைக் ரேட் ஆகியவைகளை வைத்து அவரை நல்ல
பேட்ஸ்மேன் என்று சொல்கிறோம். இது சில இடங்களில் சரியாக அமைந்தாலும், இன்னும் சில இடங்களில்
சரியாக அமைவது இல்லை.
1984 ஆம் ஆண்டு
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனவர் தான் இந்த அரவிந்தா. அந்தக் காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி மிகவும்
பின்தங்கிய அணி. அந்த அணியில் விளையாடிய வீரர்கள் யாரும் ப்ரொபஷனல் கிரிக்கெட் வீரர்
கிடையாது. அவர்கள் எல்லாரும் பகுதி நேர கிரிக்கெட்
வீரர்கள் தான். ஏதாவது தனியார் அலுவலகங்களில்
வேலை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் போது அனைவரும்
ஒன்று சேர்ந்து சில காலம் பயிற்சி மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட வருவார்கள்.
அவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் இருக்காது. ஆகவே விளையாடத் தேவையான உபகரணங்கள் அவர்களுக்கு
போதுமானதாக இருக்காது. ஒருவர் அவுட் ஆகி வெளியே வரும் போது அவரின் க்ளோவ், ஹெல்மெட்,
பேட் என்று எல்லாவற்றையும் கழட்டிக் கொடுப்பார். அதை புதிதாக களம் இறங்கும் வீரர் அணிந்து
கொண்டு பேட்டிங் செய்ய வருவார். அவர்களுக்கு போதுமான பயிற்சியாளர் கிடையாது. இது தான்
அன்றைய இலங்கை கிரிக்கெட் அணி. அந்த அணியில் விளையாடிய வீரர் தான் அரவிந்த டி சில்வா.
1984 ஆம் ஆண்டில் இருந்து 2003 உலக கோப்பை வரை அணியில் இருந்தார். இந்த 19 ஆண்டுகளில்
3 ஆண்டுகள் ( 1999 - 2003 ) அவர் அணியில் இல்லை.
இலங்கை கிரிக்கெட் போர்டுடன் ஒரு கருத்து வேறுபாடு காரணமாக அவர் கிரிக்கெட்டை தவிர்த்து
விட்டார். தனது 19 ஆண்டு சர்வதேச கிரிக்கெட்
அனுபவத்தில் கிட்டத்தட்ட 60 சதவீத காலம் அவர் பகுதி நேர கிரிக்கெட் வீரர் ஆக தான் இருந்தார்.
பல ஆண்டுகளாக
, பல காலகட்டங்களில் கிரிக்கெட்டை ஆராய்பவர்கள் பலர் சொல்லும் ஒரு கருத்து .
" இலங்கை கிரிக்கெட் அணி உருவாக்கிய தலை சிறந்த பேட்ஸ்மேன் அரவிந்த டி சில்வா
தான். அவர் எந்த பந்து வீச்சையும் எளிதாக எதிர் கொள்வார்".
1996 ஆம் ஆண்டு
உலகக் கோப்பைப் போட்டியில் அரை இறுதி மற்றும்
இறுதி போட்டி என்று இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வாங்கியவர். 2003 ஆம்
ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா
அணிக்கு எதிராக விளையாடிய போது 92 ரன்களை எளிதாக விளாசி சென்றார். பிரெட் லீயின்
150 கிலோ மீட்டர் வேகப்பந்தை அவர் இரண்டு முறை சிக்ஸர்களாக மாற்றிய ஷாட்டை பிரெட் லீ இன்றுவரை மறக்க வாய்ப்பில்லை. இந்தியாவின்
மிக சிறந்த பந்து வீச்சாளரான கும்ப்ளேவை மிக எளிதாக எதிர்கொள்ளும் வீரர் இவர்.
2003 ஆம் ஆண்டு அரை இறுதிப் போட்டியில்
மெக்ராத்தை மிக எளிதாக எதிர்கொண்டு விளையாடிய போது, ஆண்டி பிக்கேல் பந்து வீச்சில்
ரன் அவுட் ஆகி சென்றார் அரவிந்தா. 1996 ஆம்
ஆண்டு உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில்
முதல் ஓவரில் ஜெயசூரியா மற்றும் களுவிதரனா இருவரும் அவுட் ஆனதும் வெற்றி நமக்கே என்று
நினைத்த இந்திய அணியை வெளுத்து வாங்கினார் அரவிந்தா. அவர் அந்தப் போட்டியில் மிக வேகமாக
அடித்த 60 + ரன்கள் தான் இந்தியாவின் தோல்விக்கு அடித்தளம் இட்டது.
1995 ஆம் ஆண்டு,
ஆறாவது வீரராக களம் இறங்கும் ஜெயசூரியாவை ஓபனிங் இறக்கி பார்க்கலாம் என்ற முடிவை எடுத்தவர்கள்
அந்த அணியின் கேப்டன் ரணதுங்கா, அணியின் பயிற்சியாளர் வாட்மோர் மற்றும் அணியின் சீனியர்
வீரர் அரவிந்தா தான்.
அரவிந்த டி
சில்வா அடிக்கும் கவர் டிரைவ், சச்சின் டெண்டுல்கர் அடிக்கும் கவர் டிரைவ் இரண்டும்
ஒரே மாதிரி இருக்கும். புல் ஷார்ட் மற்றும் ஹூக் ஷார்ட் எல்லாம் அடிக்கபடாத காலத்தில்
அந்த ஷாட் களை எல்லாம் எளிதாக, முன்னணி பந்து வீச்சாளர்கள் பந்தில் அடித்தவர் தான்
இந்த அரவிந்த டி சில்வா.
இலங்கை அணியின்
கேப்டன் ஆக ஜெயசூரியா பொறுப்பு ஏற்ற போது கிரிக்கெட் போர்டுடன் பேசி, 2003 ஆம் ஆண்டு
உலகக் கோப்பைக்கு அணியில் அரவிந்த டி சில்வா
வேண்டும் என்று கூறியதால், கிரிக்கெட் போர்டு அவரிடம் சமரசம் பேசி அவரை அணியில் விளையாட
வைத்தார்கள்.
உலக அரங்கில்
சச்சின் டெண்டுல்கர் எப்படியோ , அவருக்கு நிகராக பேட்டிங் திறமை கொண்டவர் தான் அரவிந்த
டி சில்வா. ஆனால் அவர் விளையாடிய காலகட்டம் ,
அவர் ஒரு செமி ப்ரொபஷனல் கிரிக்கெட் வீரர், அவர் விளையாடிய அணி, அவருக்கு கிடைத்த
குறைந்த வசதிகள் இவைகளை வைத்து சர்வதேச கிரிக்கெட்டில்
31 சதங்கள் மற்றும் 85 அரை சதங்கள் அடித்தார் இந்த அரவிந்த டி சில்வா. முக்கியமான விஷயம்
என்னவென்றால் இவர் ஒரு அதிரடி வீரரும் கூட.
பாகிஸ்தான்
அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி. அது 5 ஆம் நாள். இன்னும் 10 ஓவர்கள் தான் மீதி இருக்கிறது.
இலங்கை பேட்டிங் செய்து கொண்டு இருந்தது. 6 விக்கெட் விழுந்து விட்டது. அரவிந்த டி
சில்வா களத்தில் உள்ளார். போட்டியை ட்ராவில்
முடித்துக் கொள்ளலாமா என்று இலங்கை கேப்டன் ரனதுங்கா கேட்ட போது , பாகிஸ்தான் அணி தலைவர்
வாசிம் அக்ரம், "வேண்டாம். 10 ஓவர்கள் பந்து வீசலாம் தானே. நாங்கள் மீதி இருக்கும்
4 விக்கெட்டை எடுக்க முயற்சி செய்வோம்" என்று சொல்லி விட்டார். இதை கேட்டுக் கடுப்பான
அரவிந்த டி சில்வா, வாசிம் அக்ரம் வீசிய பந்துகளை
அடுத்தடுத்து பவுண்டரி அடித்து காட்டினார்.
அதிரடியாக அடிக்க ஆரம்பித்தார். சில
ஓவர்கள் முடிவில் வாசிம் அக்ரம், " நாம்
ட்ரா செய்து விடுவோம்" என்று போட்டியை
முடிக்க ஒப்பு கொண்டார்.
சச்சின் டெண்டுல்கருக்கு
நிகராக திறமை கொண்டவர். சங்ககாரா , ஜெயவர்தனே
இவர்களை விட சிறந்த பேட்ஸ்மேன். தவறான இடத்தில் இருந்ததால் அன் சங் ஹீரோ ஆகி விட்டார்.
- ஆண்டனி தினேஷ்
Pc : Internet